Tuesday 23 May 2017

யாரோ ஒருவர்

யாரோ ஒருவரின்
துயரத்தை விரட்டுகிறது
வீணையின் சில நரம்புகள்.

யாரோ ஒருவரின் 
தற்கொலையைத் தடுக்கிறது
கவிதையின் ஒரு வரி.

யாரோ ஒருவரின்
தனிமையைத் தகர்க்கிறது
ஜன்னல் வந்தமரும் குருவி.

யாரோ ஒருவரின்
கண்களை நனைக்கிறது
ஸ்வர்ணலதாவின் போறாளே பொன்னுத்தாயி.

யாரோ ஒருவரின்
தைரியத்தை வளர்க்கிறது
நண்பனின் கைகுலுக்கல்.

யாரோ ஒருவரின்
கோபத்தைக் கிளருகிறது
இதுபோன்ற சில வரிகள்.

நீங்களா அந்த
யாரோ ஒருவர்...?

1 comment: